நால்வகைப் பிறப்பும் நவிலல்

1921.

ஓடுஞ் சகடத் துருளு மொளிகொள
வீடி லொருவன் 1விசிறும் வளையமும்
ஆடுந் துகளு மெனச்சுழன் றாருயிர்
நாடுங் கதியவை நான்குள கண்டாய்.
     (இ - ள்.) ஓடும் சகடத்து உருளும் - ஓடாநின்ற பண்டியின் உருளைகளையும்,
ஒளிகொள - ஒளியுண்டாகும்படி, வீடில் ஒருவன் - தொழிலை விடாதியற்றுகின்ற
ஒருவனாலே, விசிறும் வளையமும் - சுழற்றி எறியப்படுகின்ற வளையத்தையும்,
ஆடும் துகளும் - காற்றாலே இயங்குகின்ற அணுவையும், என - போன்று, ஆருயிர் சுழன்று - சிறந்த உயிர்கள் சுழற்சியடைந்து, நாடும் கதியவை - விரும்பிச் செல்கின்ற கதிகள், நான்கு உள கண்டாய் - நான்கு உள்ளன, அறிக, (எ - று)

     சகடத்துருளும், வளையமும், துகளும் போலச் சுழன்று உயிர்கள் நாடும் பிறப்பு
நான்கு வகைத்தாம், என்றான் என்க.
(811)