நரகர்கதித் துன்பம்

1923. கீழா 3நரகங் கிளத்தும் படலங்கள்
ஏழா யிருபத் திரட்டியோ டொன்பது
போழா மவற்றுள் ளவர்கள் புகலிடம்
பாழா மிலக்கமெண் பஃதுட னான்கே.
இது முதல் 3 செய்யுள் ஒரு தொடர்
 
     (இ - ள்.) கீழாம் நரகங்கள் - கீழே உள்ளனவாகிய நரக லோகங்கள், கிளத்தும்
படலங்கள் - கூறப்படுகின்ற பகுதிகள், ஏழாய் - ஏழாகி விரிந்து, இருபத்து இரட்டியோடு
ஒன்பது - நாற்பத்தொன்பது. போழாம் - உட்பிரிவு களையும் உடையனவாம், அவற்றுள் -
அவ்விடங்களில், அவர்கள் புகலிடம் - அந் நரகர்கள் புகும் புரைகள், பாழாம் இலக்கம்
எண்பஃது உடன் நான்கே - எண்பத்து நான்கு நூறாயிரம் என்னும் முடிவையுடையவாம்,
(எ - று.)

பாழாம் இலக்கம் எண்பத்துநான்கு - இலக்கத்தோடு முடிகிற எண்பத்துநான்கு
என்றபடி.

     பாழ்ஆம் - முடிவு ஆம். எனவே, எண்பத்துநான்கு நூறாயிரம் என்றவாறாயிற்று.
போழ் - பிரிவு. படலம் - பகுதி.

     “ஏழாய் அவை விரிந்து எண்பத்துநான்கு நூறாயிரமாம் போழாம் அவற்றப் புரையின்
விகற்பம்Ó என்றார் நீலகேசியினும்.

 (813)