1928. | குழிபடு கும்பிக் கருவாய் பெருகி அழுக லுடம்பிவை யங்கு நிறைந்தால் வழுவி யனல்படு பாறைக்கண் 1வைகிப் புழுவி னுருள்வ பொரிவ பொடிவ. | (இ - ள்.) குழிபடு கும்பி - குழியில் நிறைந்துள்ள கும்பியின், கருவாய் பெருகி - பிறப்பின் வாயிலாய்ப் புகுந்து நிறைந்துள்ள, அழுகல் உடம்பு இவை - அழுகிய உடம்பையுடைய இவ்வுயிர்கள், அங்கு நிறைந்தால்- அக்குழி யிடமிலாதபடி நிறைந்தவிடத்தே, வழுவி - அவற்றினின்றும் விலகி, அனல்படு பாறைக்கண் வைகி - நெருப்புடைய பாறைக்கற்களின் மேலே தங்கி, புழுவின் - புழுக்களைப்போன்று, பொரிவ - பொரிந்து வருந்து வனவும், பொடிவ - துகளாய்ப் போவனவும் ஆம், (எ - று.) அக் கும்பிகளிடமில்லாதபடி அவ்வுயிர்கள் நிறைந்துவிட்டால், பின்னர் நெருப்புப் பாறைகளின்மேற் றங்கி புழுக்களைப் போன்று உருண்டும் பொரிந்தும் பொடிவனவாம் என்க. | (818) | | |
|
|