1931.

அன்னணம் வேதனை யெய்து 2மவர்களைத்
துன்னி யுளர்சிலர் 3தூர்த்தத் தொழிலவர்
முன்னதிற் செய்த வினையின் முறைபல
இன்னண மெய்துமி னென்றிடர் செய்வார்.
 
     (இ - ள்.) அன்னணம் வேதனை எய்தும் அவர்களை - அவ்வாறு துன்பமுறும்
அந்நரகர்களை, துன்னி உளர்சிலர் - நெருங்கி உளராகிய சிற்சிலர், தூர்த்தம் தொழிலவர் -
தீத் தொழிலையே செய்தவராகிய நீவிர், முன்னதிற் செய்த வினையின் முறை -
முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயனாகிய முறைமையுடைய, பல இன்னணம் - பல்வேறு
துயரங்களையும் இவ்வாறே, எய்துமின் என்று - நுகருங்கோள் என்று கூறிக் கடிந்து, இடர்
செய்வார் - மேலும் துன்புறுத்தா நிற்பர், (எ - று.)

     அங்ஙனம் இடர் செய்வார் எமபடர் என்க.

அவ்வாறு வேதனை எய்தும் அவர்களை எமபடர் முன் செய்த தீவினைப் பயனை
இவ்வாறு நுகர்மின் என்று மேலும் இன்னா செய்வர் என்க.

(821)