1932. தங்கிருட் போதிற் றலைச்சென் றயன்மனை
அங்கு மகிழ்ந்தா னவளிவள் காணெனச்
செங்கன லேயென வெம்பிய 1செம்பினில்
பொங்கனற் பாவைகள் புல்லப் புணர்ப்பார்.
 
     (இ - ள்.) இருள் தங்கு போதில் - இருள் வதிகின்ற இராக்காலத்தே, அயன்மனைத்
தலைச்சென்று - அயலான் இல்லத்தே சென்று, அங்கு மகிழ்ந்தாளவள் -
அவ்விடத்தேயுள்ள பிறனோடு கூடிக் களித்தவளாகிய, இவள்காண் என - இவளைக்
காணுங்கோள் என்று கூறி, செங்கனலே என செவ்விய தீப்பிழம்பைப் போன்று, வெம்பிய -
உருகிய, செம்பினில் பொங்கு அனற்பாவைகள் - செம்பாலியன்ற பொங்கும் நெருப்புப்
படிவங்களை, புல்லப் புணர்ப்பார் - தழுவும்படி செய்வார், (எ - று.)

     இரவில், பிறன்மனை புக்குப் பிறனோடு களித்தவளாகிய இவள் படும்பாட்டைப்
பாருங்கோள் என்று கூறி, அத்தகைய மகளிரை நெருப்புப் பாவைகளோடு
புணர்த்துவரென்க.

(822)