1936.

2இடைப்பல சொல்லி யெளியவர் தம்மை
உடைப்பொருள் வெஃகி யொறுத்த பயத்தான்
முடைப்பொலி மேனியை முண்மத் திகையால்
புடைப்ப நடுங்கிப் புரளவ ரொருசார்.
       (இ - ள்.) எளியவர் தம்மை - ஏழைகளை, இடைப் பல சொல்லி - இடைப்போதில்
இனியன போன்ற வஞ்சகமொழிகள் பலவற்றைக் கூறி, உடைப்பொருள் வெஃகி -
அவர்கட்கு உரிய பொருள்களை விரும்பி, ஒறுத்த பயத்தான் - அவற்றைக் கவர்ந்து
அவர்களைத் துன்புறுத்திய தீவினையின் பயனாக, முடைப்பொலி மேனியை - ஊனாலே
விளக்கமுடைய அவர்களுடைய உடலை, முள் மத்திகையால் புடைப்ப - முள் அமைந்த
சம்மட்டியாலே தாக்க, நடுங்கிப் புரள்வர் ஒருசார் - துன்புற்று நடுங்கியவர்களாய்த் தரையில்
வீழ்ந்து புரளா நிற்பர் ஒரு பக்கத்தே, ()

     எளியவரைப் பொருளை விரும்பி இன்னல் செய்தவர்களை முட் சம்மட்டியாலே
புடைப்ப, அவர் நடுங்கிப் புரள்வர் என்க.

(826)