1939. | பழுப்பல பற்றிப் பறிப்பர் பதைப்ப மழுப்பல கொண்டவர் மார்பம் பிளப்பர் கழுப்பல வேற்றி யகைப்பர் கடிதே விழுப்பெரும் பூணோய் வினையின் விளைவே. | (இ - ள்.) பழு பல பற்றிப் பறிப்பர் - பலருடைய பழுவெலும்புகளைக் குறட்டாற்பற்றிப் பறிப்பார், மழுப்பல கொண்டு பதைப்ப அவர் மார்பம் பிளப்பர் - கோடரிகளைக் கைக்கொண்டு உடல் துடிக்கும்படி அந்நரகருடைய மார்பினைப் பிளப்பார், கழுப்பல ஏற்றிக் கடிதே அகைப்பர் - பலவாகிய கழு மரங்களிலே ஏற்றிக் கடுமையாக அழுத்துவர், விழுப்பெரும் பூணோய் - சிறந்த பெரிய அணிகலன்களையுடைய அரசே, வினையின் விளைவே - இவையெல்லாம் அவ்வவர் முன் செய்த தீவினைகளின் பயன் என்று அறிக, (எ - று.) பறிப்பர் பிளப்பர் அகைப்பர் இவை அவர்செய்த வினையின் பயன் என்றான் என்க. | (829) | | |
|
|