1941. | 1சாவ நலிந்திருடந் தண்ணீர்ப் 2பிணிபெரி(து) ஆவென் றலறு மவரையரு நஞ்சின் வாவிகள் காட்டலின் மண்டி மடுத்துண்டு நாவு மழுக நரல்வ ரொருசார் | (இ - ள்.) தண்ணீர்ப்பிணி பெரிது - நீர் வேட்கையாலாய துன்பம் மிக்கது, ஆ - ஐயகோ, சாவ நலிந்திடும் என்று - எம்மை உயிர்போம்படி துன்புறுத்துகின்றதே என்று, அலறும் அவரை - அலறி அழுகின்ற அந்நரகரை, அருநஞ்சின் வாவிகள் காட்டலின் - மாற்றுதற்கு அரிதாகிய கொடிய நச்சுத்தன்மையுடைய குளங்களைக் காட்டுதலாலே, மண்டி - அந் நஞ்சுடைய குளங்களில் விரைந்து சென்று, மடுத்து உண்டு - ஆர்வத்தோடு அந்நீரை வாய்மடுத்துப் பருகி, நாவும் அழுக - தம் நாவுகளும் அழுகிவிட, ஒருசார் நரல்வ - ஒரு பக்கத்தே அழா நிற்பர், (எ - று.) சாமாறு வருத்தும் நீர் வேட்கையாலே அலறுவோரை நஞ்சின் வாவிகள் காட்டலின் மண்டி உண்டு நாவுமழுகிவிட அழாநிற்பர் என்க. | (831) | | |
|
|