1942. அழலிவை யாற்றோ மெனவழன் றோடி
நிழலிவை யாமென நீள்பொழிற் புக்கால்
3தழல்வளி தாமே தலைவழி சிந்தக்
கழல்வனர் வீழ்ந்து கரிவ ரொருசார்.
 
     (இ - ள்.) அழலிவை ஆற்றோம் - இந்நெருப்பிடை நிற்றலை இனிப் பொறோம், என
- என்று கூறி, அழன்று - மனம் புழுங்கி, நிழல் இவையாம் என நீள்பொழில் ஒடிப்புக்கால்
- இவை நமக்கு நிழலாகும் என்று கருதி ஆங்குள்ள நீண்ட சோலைகளினூடே ஓடிப்
புகுந்தவிடத்தே, தழல்வளி தாமே - அச்சோலையில் நெருப்புக்காற்று, தலைவழி சிந்த -
மேலிருந்து தம் தலையின் வழிச்சொரிய, கழல்வனர் - உய்வோம் என்னும் நம்பிக்கை
கழன்றவராய், வீழ்ந்து கரிவர் ஒருசார் - தரையிடை விழுந்து உடல் கருகுவர் ஒரு
பக்கத்தே, (எ - று.)

     அவ்விடத்தேயுள்ள தீக்குப் பயந்து ஓடி நிழலிலே புக்கால் தீக்காற்றுத் தம்
தலையிலே சொரிய வீழ்ந்து கரிவர் என்க.

(832)