1943.

முல்லை முகைமலர்த் தாரோய் முதற்புரை
அல்ல லெனைப்பல வாயிர கோடிகள்
எல்லையி றுன்ப மிவற்றி னிருமடி
புல்லினர் கீழ்க்கீழ்ப் புரைபுரை தோறும்.

       (இ - ள்.) முல்லை முகை மலர்த்தாரோய் - முல்லை மலர் மாலையை அணிந்த
வேந்தனே, முதற்புரை அல்லல் - நரகத்தின் முதலாவதாகிய இப்பேரிருளில்
உழப்பனவாகிய இன்னோரன்ன இன்னல்கள், எனைப்பல ஆயிரகோடிகள் -
எத்துணைவகையாகவும் பல்லாயிரக்கோடிகளாகவும், எல்லையில் துன்பம் - முடிவற்ற
துயரந்தருவனவாம், கீழ்க்கீழ் புரைபுரை தோறும் - நிரலே இரண்டாம் புரைமுதலாக
அடுத்தடுத்துக் கீழே உள்ளனவாகிய புரைகள் தோறும், இவற்றின் இருமடி புல்லினர் -
இவையிற்றைப் போன்று ஒவ்வொன்றினும் இவ்விரண்டு மடங்கு பெருக நுகர்வர், (எ - று.)

     தாரோய்! நரகத்தின் முதற்புரையின்கண் உள்ளோர் அல்லல்கள் இவை போல்வன
எண்ணிறந்தனவாம், கீழ்க்கீழ் நரகங்களின் அவ்வின்னல் மிகும் என்றார் என்க.

(833)