1946. | எழுவின் முழமூன் றறுவிர லென்ப வழுவின் முதலதன் கீழ்ப்புரை வாழ்வார் ஒழிவில பொங்குவ ரோசனை யேழ்மேன் முழுவிலைஞ் ஞூற்றொடு முக்கா வதமே. | (இ - ள்.) வழுவின் முதல் வாழ்வார் - குற்றமள்ள முதல் நரகத்தின் வாழ்வோருடைய உடலின் உயரத்திற்குப் பேரெல்லை, எழுவில் முழ மூன்று அறுவிரல் என்ப - ஏழுவில் மூன்று முழம் ஆறுவிரல் என்று கூறுவர்; அதன் கீழ்ப்புரை வாழ்வார் - அக்கடைசி நரகத்தில் உள்ள ஒற்றைப்புரையில் வாழும் நரகர் உடல் உயரத்தின் பேரெல்லை, முழுவில் ஐஞ்நூறு - ஐந்நூறுவில் என்று கூறுவர், ஒழிவில ஓசனை ஏழ்மேல் பொங்குவர் - இவற்றுள் முதல் நரகத்தினர் இடையறாதனவாகிய ஏழுயோசனை உயரம் வானத்தே இயங்கி உயர்வர், மூக்காவதம் - கீழ்நரகத்தினர் முக்காவத உயரம் இயங்கி உயர்வர், (எ - று.) முதலதன்கண் வாழ்வார் உயரம் ஏழுவில் மூன்றுமுழம் ஆறுவிரல், இறுதி நரகில் வாழ்வார் உயரம் ஐந்நூறுவில், முதல் நரகின் உயரம் ஏழுயோசனை கீழ்நரகின் உயரம் முக்காவதம், என்றவாறு. இங்ஙனம் கொண்டுகூட்டிப் பொருள் கூறாதவிடத்து இது மற்றை நூல்களோடு முரணுகின்றது; ஆகலின் மற்றை நூலோடு பொருந்துமாறு இங்ஙனம் கூறினோம். | (836) | | |
|
|