1950. | வேவா ரழலுள் விளியா 1ரளற்றினுள் ஓவார் புகையு ளுகையா 2வுழல்பவர் ஆவா வளிய நரகர் படுதுயர் ஏவார் சிலையா யிரங்குந் தகைத்தே. | (இ - ள்.) அழலுள் வேவார் - தீயினுள்ளே வேகும் போதும், விளியார் - இறப்பாரும் அல்லர், அளற்றினுள் ஓவார் - சேற்றினுள் அழுந்தியும் ஒழிவாரல்லர், புகையுள் உகையா - புகைப்படலத்தூடே செலுத்தப்பட்டும், விளியார் - இறப்பாரல்லராய், உழல்பவர் - துன்பத்துள் உழல்வாராகிய ஆ! ஆ! - அந்தோ, அளிய நரகர் - அளிக்கத்தக்கவராகிய அந்நரகர்கள், படுதுயர் - அடைகின்ற துன்பம், ஏவார்சிலையாய் - அம்புகளை ஏவுதற்கியன்ற வில்லையுடைய வேந்தனே, இரங்குந்தகைத்தே - நம்மனோரால் இரங்கும் தகுதியையுடைய தொன்றாயிருக்கும், (எ - று.) விளியார் என்பது பிறிதோரிடத்தும் கூட்டப் பட்டது. அருள்புரிந்த நெஞ்சினராகலின் இவையிற்றைக் கூறுங்கால் அம் முனிவர் அந்நரகர் துயர்க்கு இரங்கி ஆஆ என்றார் என்க. | (840) | | |
|
|