1952. உள்ளங் கொடியா ருயிர்க்கொலை 2காதலர்
வெள்ளங் கொடியன மேவிப் பிறன்பொருள்
கொள்ளுங் கொடுமைக் 3குணத்தின் மனித்தரும்
நள்ளலர்ச் சாய்த்தோய் நரக மடைவார்.
 
     (இ - ள்.) நள்ளலர்ச் சாய்த்தோய் - பகைவர்களை வென்ற வேந்தனே, உள்ளம்
கொடியார் - தீய நெஞ்சமுடையராய், உயிர்க் கொலை காதலர் - பிறவுயிர்களைக் கொல்லுந்
தொழிலை விரும்புவோரும், கொடியன மேவி - களவு வஞ்சம் கொலை முதலிய தீத்
தொழிலைப் பொருந்தி, பிறன் பொருள் வெள்ளம் கொள்ளும் - பிறனுடைய பொருட்
பெருக்கத்தைக் கவர்ந்து கொள்ளும், கொடுமைக் குணத்தின் மனித்தரும் - கொடிய
குணத்தையுடைய மனிதர்களும், நரகம் அடைவார் - அந்த நரகங்களிலே வீழ்பவராவர்,
(எ - று.)

     மேலும், உயிர்க் கொலை செய்வோரும் பிறன்பொருள் வெஃகுவோரும் கொடுமைக்
குணமுடையோரும் அந்நரகப் பிறப் பெய்துவர் என்றார் என்க.

(842)