1953. நல்லறங் காய்ந்து நலிந்து பொருள்படைத்
தில்லறஞ் செய்யா திறுகு பவர்களும்
புல்லறம் புல்லாப் புலவரை வைதுரைத்
தல்லறஞ் செய்யு மறிவில் லவரும்
 
     (இ - ள்.) நல்லறம் காய்ந்து - உயரிய அறச்செயல்களை வெறுத்து, நலிந்து பொருள்
படைத்து - பிறவுயிர்கட்கு இன்னா செய்தும் தம்முடம்பு செற்றும் அதன்வழிப் பொருள்
ஈட்டி, இல்லறம் செய்யாது - இல்லறத்தார்க்குரிய அறங்களையும் செய்யாதவராய்,
இறுகுமவர்களும் - உலோபத்தால் வலிந்த மனத்தை யுடையோரும், புல்லறம் புல்லாப்
புலவரை - மற்நெறிச் செல்லாத அறிஞரை, வைதுரைத்து - வசைபேசி, அல்லறம் செய்யும்
- தீவினையே செய்கின்ற, அறிவில்லவரும் - பேதைகளும்,
(எ - று.)

     மறநெறியிலே பொருளீட்டுவோரும் அறஞ்செய்யாக் கயவரும் புலவரை வைவோரும்
அல்லறஞ் செய்யும் அறிவிலிகளும் (நரக கதி எய்துவர்) என்க.

(843)