விலங்குகதித் துன்பம் விலங்குகளின் வகை | 1956. | விலங்குடன் சாதி விரிப்பிற் பெருகும் உலங்கொண்ட தோண்மன்ன வோரறி வாதி புலங்கொண்ட வைம்பொறி 2யீறாப் புணர்ந்த நலங்கொண்ட ஞாலத்தி னாடி யுணர்நீ. | இது முதல 15 செய்யுள் ஒரு தொடர் (இ - ள்.) விலங்குடன் சாதி - விலங்குகளினுடைய வகைகளை, விரிப்பிற் பெருகும் - விரித்துரைக்கப் புகுவேமாயின், அதுமிகப் பெருகா நிற்கும் (ஆதலிற் சுருக்கமாகக் கூறுவோம்), உலங்கொண்டதோள் மன்ன - உலக்கல்லை யொத்த தோளையுடைய அரசனே, ஓர் அறிவு ஆதி ஐம்பொறி யீறாப்புணர்ந்த - அவை ஒன்றறிவுயிர் முதல் ஐந்து பொறியான் அறியும் ஐந்தறிவுயிர் இறுதியாகத் தொகைப்படுவனவாம், நலங்கொண்ட ஞாலத்தின் - அழகிய உலகினிடத்தே, நீ நாடி உணர் - நீயே ஆராய்ந்து அறிந்துகொள்க, (எ - று,) “ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே இரண்டறி வதுவே யதனொடு நாவே மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே யவற்றொடு மனனே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.Ó (தொல் - பொ. மரபியல் - 27) ஐயறிவுடையோர் மானிடருள்ளும் உளர் எனினும் அவரையும் விலங்கெனவேகொள்க. | ( 846 ) | | |
|
|