1963. | அந்தோ வளிய விலங்குகள் யார்கண்ணும் நொந்தோ மெனச்சென்று நோக்கி னுனிப்பொடு வந்தோ மெனநின்ற 1மாண்புடை யார்களும் உய்ந்தோய்ந் தொழிய முயன்றிடு கின்றார். | (இ - ள்.) அந்தோ அளிய விலங்குகள் - ஐயகோ! அளிக்கத்தக்க அவ்வெளிய விலங்கினங்கள், யார் கண்ணும் - எத்திறத்தோரிடத்தும், நொந்தோம் எனச் சென்று - துன்புற்றோம் என்று கருதிச்சென்று, நோக்கின் - அவர் தமக்கு இரங்குவார் என நோக்கியவிடத்தும், நுனிப்பொடு - ஆராய்ச்சி அறிவோடே, உய்ந்து வந்தோம் எனநின்ற - தீவிைனைகளிற் றப்பி உயர்ந்து வந்தோம் என்று தம்மை எண்ணி நின்ற, மாண்புடையோரும் - சான்றோரும், ஓய்ந்து ஒழிய - அவ்விலங்குகள் உடல் தளர்ந்து சாகும்படி, முயன்றிடுகின்றார் - தொழில் செய்விக்க முயலா நின்றனர், (எ - று.) அறிவுடையோரும் விலங்கினங்களை வருத்துதல் ஒழிகிலர் என்று துறவி இரங்கினர் என்க. | (853) | | |
|
|