அவையிற்றின் துயரங்கட்கு அம்முனிவர் இரங்குதல் | 1964. | கன்னியர் வேட்கை கடவு ளரும்பிணி துன்னிய துன்ப விலங்கின் சுடுதுயர் என்னு மிவற்றினை யெம்போல் பவரன்றி 2மன்ன வறிபவர் மற்றில்லை மன்னோ. | (இ - ள்.) கன்னியர் வேட்கை - மகளிரை விழைதலாகிய காமத்துன்பங்களும், கடவுள் அரும்பிணி - ஊழான் வருந் தவிர்த்தற்கரிய துன்பங்களும், துன்னிய துன்ப விலங்கின் சுடுதுயர் - செறிந்த துன்பத்தையுடைய விலங்குப் பிறப்பின் எய்தும் சுடுவது போன்ற இன்னல்களும், என்னும் இவற்றினை - என்று கூறப்படும் இத்துன்பங்களை, எம்போல்பவர் அன்றி - எம்மைப் போன்ற வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனிவர் அல்லாமல், மன்ன - அரசே, அறிபவர் மற்று இல்லை - உணர்கின்றவர் பிறர் யாருமிலர், (எ - று.) எவ்வுயிர்கட்கும் செந்தண்மை பூண்டொழுகும் எம்மனோர்க்கே இத்துன்பங்கள் உணரற்பாலன என்பதாம். பிறர் உணர்வாராயின் அவர் உடனே துறவின்கட் செல்வர் என்றபடி. | ( 854 ) | | |
|
|