1968. | பொருளிடை மாயம் 3புணர்த்தும் பிறரை மருளிக ளாக மயக்கு மவரும் இருளுடை யுள்ளமொ டேதங்க ளெண்ணா அருளி லவரு மவைநனி யாவார். | (இ - ள்.) பொருளிடை மாயம் புணர்த்தும் - நென்முதலிய பொருள்களை அளவைகள் முதலியவற்றால் வஞ்சித்தும், பிறரை - அயலாரை, மருளிகள் ஆக - தம் வஞ்சம் அறியாது மயங்கும்படி, மயக்கும் அவரும் - மயக்கி ஏமாற்றுபவரும், இருளுடைய உள்ளமொடு - தீமை நிறைந்த நெஞ்சத்தோடே, ஏதங்கள் எண்ணா - பிறர் கேடுசூழும், அருள் இலவரும் - அருள் இல்லாத கயவரும், அவை நனி ஆவார் - அவ்விலங்குகளாய் மிகவும் பிறப்பார், (எ - று.) பொருளிடை மாயம் புணர்த்தலாவது “கொள்வது மிகைகொண்டு கொடுப்பது குறைகொடுத்தன்“ முதலியனவாம். | (858) | | |
|
|