சேகர் இயல்பு | 1972. | பத்து வகைய பரதவி ரேவதத் தத்தகு கால விழிவி னகத்தவர் சித்தந் தெளிவிலா சீல மடைவிலர் செத்த வறிவினர் சேக ரவரே. | (இ - ள்.) பத்துவகைய - பரதம் ஐந்தும் ஐராவதம் ஐந்தும் எனப் பத்து வகையவாகியவற்றில் வைத்து, பரத இரேவதத்து - பரதகண்டம் ஐந்தனுள் வாழ்வோராய், அத்தகுகாலம் - அக்கண்டத்துத் தாம் வாழத்தக்க காலமெல்லாம், இழிவின் அகத்தவர் - இழிந்த குணங்களையுடைய உள்ளமுடையோராய், சித்தம் தெளிவிலர் - அறிவு தெளியப் பெறாதாராய், சீலம் அடைவிலர் - ஒழுக்கநெறிக்கட் சேராதவராய், செத்த அறிவினர் - அறிவற்றவராவர், சேகர் அவரே - சேகர் என்று கூறப்படும் வகையினர், (எ - று.) இழிவு - அவஸர்ப்பிணி. இரேவதம் - கண்டம். அவை, பரதகண்டம் ஐந்தும் ஐராவதகண்டம் ஐந்தும், என்னும் பத்து வகைப்படும். அவற்றுள் சேகர் என்பவர் பரத கண்டத்துள் வாழும் ஒரு வகை மனிதர் என்றுணர்க. செத்த அறிவு - அறிவின்மை. | (862) | | |
|
|