1978. கூடன் மிலைச்சர் 1குமானுட ரென்றிவர்
ஏடவிழ் தாரோ யெவரா பவரெனில்
கோடிக் குதர்க்க முரைத்துக் குணங்களை
நாடினர் கொள்ளா நலமி லவரும்.
 
     (இ - ள்.) கூடல் மிலைச்சர் - தேசத்தினுட் கூட்டங் கூட்டமாய்க் கூடி
வாழ்வோராகிய மிலைச்சரும், குமானுயர் - தீவினுள் வாழும் குமனிதர் என்னும்
மிலைச்சரும், ஆபவர் எவர் எனில் - ஆகித் தோன்றுபவர் யாரோ என்று வினவின்,
ஏடவிழ் தாரோய் - இதழ் விரிக்கும் மலர் மாலையணிந்த மன்னனே, கோடி - மனம்
கோணி, குதர்க்கம் உரைத்து - மாறுபட்ட வெளிறு பேசி, குணங்களை நாடினர் கொள்ளா -
பயன்மிக்க நற்குணங்களை ஆராய்ந்து மேற்கொள்ளாத, நலமிலவரும் -
நன்மையில்லாதவரும், (எ - று.)

     மிலைச்சராய்ப் பிறப்போர் குதர்க்கம் உரைத்துக் குணங்கொள்ளா நலமிலவரும்,என்க.
 
     நலமிலவரும், ஆங்கவர் ஆபவர் (1980 இல்) என்று முடிவுறும்.

(868)