1981. | மக்கள் 2வதியு மிரண்டரைத் தீவினுள் தக்க நிலத்துப் பிறந்தவர் தம்முளும் முக்குலத் தாரொடுங் கூடா முயற்சியர் 3ஒக்கலைப் போல்வார் பலரு முளரே. | (இ - ள்.) மக்கள் வதியும் இரண்டரைத் தீவினுள் - மனிதர் வாழ்தற்குரிய இரண்டரைத் தீவுகளிலும், தக்க நிலத்து - சிறந்த நாடுகளிலே, பிறந்தவர் தம்முளும் - பிறந்த மனிதருள்ளும், முக்குலத்தாரொடு கூடா முயற்சியர் (சேகரும் மிலைச்சரும் ஒழிந்த மனிதரும் திப்பியரும் போகரும் ஆகிய) மூன்று குலத்தினுட் டோன்றியும், அவர்தம் ஒழுக்கத்தோடு பொருந்தாத தீச் செயலை உடையராய், ஒக்கலைப் போல்வர் - பிறப்பானும் தோற்றத்தானும் மட்டுமே அவர்க் கினம் போன்றவராய், பலரும் உளர் - பற்பலர் இருப்பர், (எ - று.) இரண்டரைத் தீவுகளாவன:- சம்புத் தீவும், தாதகீடண்டத் தீவும் புட்கரத்தீவிற் பாதியுமாம். “மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்.Ó என்னுந் திருக்குறளை ஒப்பு நோக்குக. | ( 871 ) | | |
|
|