1984. அண்ணை யலிகுரு டாதி யவர்களை
மண்ணுயர் ஞாலத்து 1மானுட ராகவைத்
தெண்ணுநர் யாருள ரெல்லா மமையினும்
பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே.
 
     (இ - ள்.) அண்ணை அலி குருடு ஆதியவர்களை - மருள்பேடு குருடு முதலிய
பிறப்பினர் ஆகியவர்களை, மண் உயர் ஞாலத்து - மண் திணிந்துயர்ந்த உலகத்தே,
மானுடராக வைத்து - மனிதர் என்று, எண்ணுநர் - கருதுவார், யார் உளர் - யாரே
இருக்கின்றனர், எல்லாம் அமையினும் - நல்ல நில முதலிய எல்லா நன்மைகளும் அமையப்
பெற்றுத் தோன்றிய விடத்தும், பெண்ணின் பிறவியும் பீடு உடைத்தன்று - பெண்ணாய்ப்
பிறக்கும் பிறப்பும் பெருமை உடையதாகாது, (எ - று.)

     பெண்ணின் பிறப்புப் பீடுடைத்தன்று, என்று கோடல் சைனர்கள் கொள்கை என்க.

(874)