முயற்சி துணிதிறம்

1991. துன்னு முயற்சி துணியுந் திறமவை
பன்னி யுரைப்பிற் பலவாய்ப் பெருகினும்
தன்னிய றானந் தவமொடு பூசனை
என்னுமிந் நான்கென வெண்ணி யுணர்நீ.
 
     (இ - ள்.) துன்னும் முயற்சி துணியும் திறம் அவை - கற்ப உலகங்களிலே
செல்லுதற்குரிய நற்செயல்களைத் தெளிந்து கொள்ளும் முறைகளை, பன்னி உரைப்பில் -
ஆராய்ந்து கூறின், பலவாயப் பெருகினும் - பலபட விரியுமாயினும். (சுருங்கக்கூறுமிடத்தே),
தன் இயல் தானம் தவமொடு பூசனை என்னும் - தானமும் தவமும் பூசனையும் தன்னியலும்
என்று கூறப்படுகின்ற, இந்நான்கு என - இந்த நான்கு முயற்சிகளுமே என்று, எண்ணி
உணர்நீ - நீ ஆராய்ந்து அறிவாயாக, (எ - று.)

     தன்னியல் - உயிரின் இயல்பாகிய, சீலம்; தானம் சீலம் தவம் பூசனை என
எண்ணுவதே முறையாயினும், செய்யுளாகலின் அம்முறை பிறழ்ந்து தன்னியல் முன்னர்
வைக்கப்பட்டது.

     “நற்றானம் சீலம் நடுங்காத்தவம் அறிவர் சிறப்பு இந்நான்கும்
     மற்றாங்குச் சொன்ன மனைவியர்Ó  என்றார் சிந்தாமணியிலும்.

(881)