(இ - ள்.) நிழல்மணிப் பூணோய் - ஒளியையுடைய மணி யணிகலனையுடையவனான, மன்னா - அரசனே!, தானம் - தானங்கள் என்பன, உலைவில் ஏற்போன் உடன் - துன்பத்தாலே இரப்பவனோடு, ஈபவன் - வழங்குவோனும், ஈயும் மலைவுஇல் பொருள் - ஈதற்குரிய குற்றமற்ற பொருளும் என்னும், இன்ன மாட்சிய - இத்தகைய மூன்றானும் மாண்புடையவாய், தலையும் இடையும் கடையுமா - தலையயாய தானம் இடையாய தானம் கடையாய தானம் என்று மூன்று வகையவாக, சாற்றும் நிலைமைய - கூறப்படும் தன்மையுடையன, (எ - று.) அந்நான்கனுள் தானம் என்பது தலையிடைகடை எனும் முத்திறத்துடன் ஏற்போன் ஈபவன் பொருள் என்னும் மூன்று பகுதியினையும் உடைய தென்க. |