ஈவோற்குரிய குணங்கள் | 1995. | 2போதிசை வாற்றல் பொன்று தறுகட்பம் ஈதற் கிவறுத லேற்பவர் மாட்டெழு காதல் கழிபற்றி லாமை தெரிந்தறி வேதமின் றீவான் குணமிவை யேழே. | (இ - ள்.) போது இசைவு - காலத்திற்கியைதலும், ஆற்றல் - ஈதற்கு வேண்டிய ஆற்றலுடைமையும், பொன்று தறுகட்பம் - வன்கண்மை யில்லாமையும் (கண்ணோட்டம் உடைமையும்), ஈதற்கு இவறுதல் - வழங்குதற்கு வேணவா உடைமையும், ஏற்பவர் மாட்டு எழு காதல் - இரப்போரிடத்துச் செல்லும் அன்புடைமையும், கழிபற்றிலாமை - தம் பொருளிடத்தே மிகையாய பற்றின்மையும், தெரிந்து அறிவு - குறிப்பால் அறிந்துணர்தலும், ஏதமின்று ஈவான்குணம் - குற்றமில்லாமல் வழங்குபவனுக்கு வேண்டிய குணங்கள், இவை ஏழே - இவ்வேழுமாம், (எ - று.) பொன்றுதறுகட்பம் என்றது தறுகண்மையின்மையை; எனவே கண்ணோட்டமுண்மையும் என்றவாறு. “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது,Ó என்னும் திருக்குறளானும், காலத்திற் கியையச் செய்யும் உதவியின் மாண்பினை உணர்க. போதிசைவு முதலிய ஏழும் ஈவோன் குணம் என்க. | (885) | | |
|
|