ஈவோற்குரிய குணங்கள்

1995. 2போதிசை வாற்றல் பொன்று தறுகட்பம்
ஈதற் கிவறுத லேற்பவர் மாட்டெழு
காதல் கழிபற்றி லாமை தெரிந்தறி
வேதமின் றீவான் குணமிவை யேழே.
 
     (இ - ள்.) போது இசைவு - காலத்திற்கியைதலும், ஆற்றல் - ஈதற்கு வேண்டிய
ஆற்றலுடைமையும், பொன்று தறுகட்பம் - வன்கண்மை யில்லாமையும் (கண்ணோட்டம்
உடைமையும்), ஈதற்கு இவறுதல் - வழங்குதற்கு வேணவா உடைமையும், ஏற்பவர் மாட்டு
எழு காதல் - இரப்போரிடத்துச் செல்லும் அன்புடைமையும், கழிபற்றிலாமை - தம்
பொருளிடத்தே மிகையாய பற்றின்மையும், தெரிந்து அறிவு - குறிப்பால் அறிந்துணர்தலும்,
ஏதமின்று ஈவான்குணம் - குற்றமில்லாமல் வழங்குபவனுக்கு வேண்டிய குணங்கள், இவை
ஏழே - இவ்வேழுமாம்,
(எ - று.)

     பொன்றுதறுகட்பம் என்றது தறுகண்மையின்மையை; எனவே
கண்ணோட்டமுண்மையும் என்றவாறு.

     “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
     ஞாலத்தின் மாணப் பெரிது,Ó
  
      என்னும் திருக்குறளானும், காலத்திற் கியையச் செய்யும் உதவியின் மாண்பினை
உணர்க.

     போதிசைவு முதலிய ஏழும் ஈவோன் குணம் என்க.

(885)