(இ - ள்.) கடை நின்றவர் உறுகண் கண்டு இரங்கி - தன் வீட்டு வாயிலில் நின்றவர்களின் இன்னலைக் காணுங்கால் மிக்க இரக்கங்கொண்டு, உடைய தம் ஆற்றலின் உண்டி கொடுத்தார் - தம்முடைய தாளாற்றித் தந்த பொருளாகிய உணவை இன்னலுறும் அவர்கட்கு வழங்குவோர், படைகெழு தானைய - போர்க்கருவிகள் மிக்க படையின் கண்ணவாகிய, பல்களியானை - பலவாகிய களிப்பு மிக்க யானைகளோடே, குடைகெழு - திங்கள் வெண்குடைகளையும் மிக்குடைய, வேந்தர்கள் ஆகுவர் - மன்னர்களாய்ப் பிறப்பார்கள், வேந்தே - மன்னனே, (எ - று.) வறியார்க்கு உண்டி கொடுத்தோர் மன்னராய்த் தோன்றுவர் என்க. |