துறவியர்க்கீந்த தானப் பயன்.

2000. ஒத்த குணங்க ளமைந்தாங் குறுவர்க்குத்
தத்துவந் தேறி யவன்செய்த 2தானங்கள்
முத்திறத் துள்ளும் படாது முடிமன்ன
உத்தம தேவரு ளுய்க்கு முணர்நீ.
 
     (இ - ள்.) ஒத்த குணங்கள் அமைந்து - தானம் செய்வோர்க்குப் பொருந்திய எல்லாக்குணங்களும் நன்கு அமையப்பெற்று, தத்துவம் தேறியவன் - மெய்யுணர்ந்த ஒருவனால், உறுவர்க்கு - துறவிகளுக்கு, செய்த தானங்கள் - வழங்கப்பட்ட தானச்செயல்கள், முத்திறத்துள்ளும் படாது - செய்தவனை விலங்கும் நரகரும் மக்களுமாகிய மூவகைப் பிறப்பினுள்ளும் செல்லாதவாறு செய்து, உத்தம தேவருள் உய்க்கும் - உயரிய தேவப் பிறப்பினுள்ளே
செலுத்தா நிற்கும், முடிமன்ன நீ உணர் - முடியணிந்த மன்னனே! நீ இதனை
உணர்க, (எ - று.)

     “உதவி வரைத்தன் றுதவி யுதவி
     செயப்பட்டார் சால்பின் வரைத்துÓ   என்னும் திருக்குறட் கருத்தையும் ஈண்டுக் கருதுக.

     முத்திறம் - கர்ப்பம், உபவாதம் சம்மூர்ச்சனம் என்பனவுமாம்

(890)