கொல்லா விரதத்தின் சிறப்பு

2002. எல்லா விரத மியல்பொக்கு மாயினும்
அல்லா விரத மனையா 6யவர்கட்குக்
கொல்லா விரதங் குடைமன்ன 7வாமெனின்
வெல்லா வகையில்லை வீங்கெழிற் றோளாய்.
 
     (இ - ள்.) எல்லா விரதம் இயல்பு ஒக்குமாயினும் - இவ்வாறு கூறப்பட்ட விரதங்கள்
எல்லாம் நன்மையளிப்பதில் ஒத்த தன்மையுடையவே ஆயினும், விரதம் அல்லா -
விரதங்கள் அனைத்தையும் ஒருங்காற்றும் ஆற்றல் இல்லாத, மனையாயவர்கட்கு -
இல்லறத்தார்க்கும், வீங்கெழிற்றோளாய் குடை மன்ன! - பருத்த அழகிய தோளை
யுடையவனான வெண்குண்டைவேந்தனே, கொல்லாவிரதம் ஆம் எனின் - கொல்லாமை
என்னும் விரதம் ஒன்றையேனும் குறிக்கொண்டு மேற்கோடல் ஆகுமாயின், வெல்லா
வகையில்லை - அவ்வில்லறத்தார் வென்றொழிக்க வியலாத தீவினை வேறு பிற இல்லை,
(எ - று.)

      எல்லா விரதமும் என்றதன் கண் உம்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது.

     “ஒன்றாக நல்லது கொல்லாமைÓ, “கொல்லா நலத்தது நோன்மை’. “கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலைÓ என்னும் பொன் மொழிகளானும் கொல்லா விரதத்தின்
பெருமையை உணர்ந்து கொள்க.

(892)