புண்ணிய வாயில்கள் பிறவும் உளவெனல் | 2007. | புண்ணிய வாயி லெனநாம் புகழ்ந்துரை கண்ணிய நான்கா 2யடங்கினுங் காவல நுண்ணிய நூல்வழி நோக்கி நுனித்தவர் எண்ணிய வாயில்க ளின்னு முளவே. | (இ - ள்.) புண்ணிய வாயில் என - கற்ப உலகங்களை அடைதற்குரிய நல்வினையாகிய வழிகள் என்று, நாம் - யாம், புகழ்ந்து உரை கண்ணிய - புகழ்ந்து மொழிந்தமையாலே கருதப்பட்டவை, நான்காய் அடங்கினும் - தன்னியல் தானம் தவம் பூசனை என்னும் நான்கு வகையானே அடங்குவனவானாலும், காவல - அரசனே, நுண்ணிய நூல்வழி - நுண்பொருள்களையுடைய மெய்ந்நூல் வாயிலாய், நோக்கி - பார்த்து, நுனித்தவர் - ஆராய்ந்த சான்றோர், எண்ணிய வாயில்கள் - கருதிய வழிகள், இன்னும் பல உள - இவையிற்றின் வேறாய்ப் பலவுளவாம், (எ - று.) | (897) | | |
|
|