எழுவகை அறவாயில்கள்

2008. அருளுந் தெருளுங் குணத்தின்க ணார்வமும்
பொருளொன்று 1சேரும் புகழ்ச்சி 2நிகழ்வும்
3மருளி றவமும் வாலிய ஞானமும்
4இருளறு தியான நிகழ்வுமென் றேழே.
 
     (இ - ள்.) அருளும் - அருளுடைமையும், தெருளும் - அறிவுடைமையும்,
குணத்தின்கண் ஆர்வமும் -உயரிய குணங்களை விழைதலும், பொருள் ஒன்று சேரும்
புகழ்ச்சி நிகழ்வும் - மெய்யுணர்ச்சி உண்டாதற்குரிய புகழ்ச்சி நிகழ்வும், மருள் இல் தவமும்
- அறியாமையில்லாத தவமும், வாலிய ஞானமும் - தூய்தாகிய அறிவும், இருள் அறு
தியான நிகழ்வும் - மயக்கம் அறுதற்குரிய தியான நிகழ்வும், என்று ஏழே - என்று ஏழு
வாயில்களும் வேறுள்ளன, (எ - று.)

     முன்னர்க் கூறிய நான்கேயன்றி அருள் முதலிய இவ்வேழும் அற வாயில்களாம்
என்க.

(898)