தெருளின் திறம்

2010. வையினும் வாழ்த்தினும் வாளா விருப்பினும்
வெய்ய 1முனிதல் குளிர்தல் வெறுப்பொடு
மையன்மும் 2மூடப் பகுதி மயக்கின்மை
செய்ய மனத்தோர் 3தெருளின் றிறமே.
 
     (இ - ள்.) வையினும் - பிறர் தம்மை வசைகூறிய போதும், வாழ்த்தினும் - அன்றிப்
புகழ்ந்து வாழ்த்தியபோதும், வாளா விருப்பினும் - இரண்டுமன்றி வாளாவிருக்கும்போதும்,
வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு முறையே வெவ்வியவாகச் சினத்தலும் மகிழ்தலும்
வெறுத்தலும் ஆகிய இம்மூன்றோடும், மையல் -மயக்கமின்மையும், மும்மூடப்பகுதி மயக்கு
இன்மை - மூன்று மூடப்பகுதிகளால் மயக்கப்படாமையும், செய்ய மனத்தோர் -
செம்மையுடைய நெஞ்சுடைய சான்றோர்களுக்குரிய, தெருளின்திறம் - தெருள் என்பதன்
தன்மையாம், (எ - று.)

     மையல் - மோகவனீயகர்மங்கள். மும்மூடப் பகுதி :- உலக மூடம் பாசண்டிமூடம்
தேவமூடம் என்பன.

     பிறர் தம்மை வைத விடத்தும் வாழ்த்திய விடத்தும் நிரலே விருப்பும் வெறுப்புமின்றி
நெஞ்சம் சமனிலையினிற்றலும் மயக்கின்மையும், மும்மூடப் பகுதியின்மையும் தெருள்
எனப்படும் என்க.

(900)