தவம்

2013.

அற்ற 2துவர்ப்பின ராகு மருநிலை
உற்றவர்க் கிவ்வா றொழுக்கந் தலைநிற்றல்
நற்றவ மென்றிங்கு நாங்கண் மொழிந்தது
மற்றிது வாணுல காள்விக்கு மன்னா.

     (இ - ள்.) அற்ற துவர்ப்பினர் ஆகும் - ஆசியம் முதலிய அறுவகைத் துவர்ப்புகளும்
அற்றவராகும், அருநிலை - நிற்றற்கரிய இவ்வுயர்ந்த நிலைக்கண், உற்றவர்க்கு -
பொருந்தியவர்கட்கு, இவ்வாறு ஒழுக்கம் தலைநிற்றல் - இவ்வண்ணமாக நல்லொழுக்கத்தே
சிறந்து நிற்றலே, நற்றவம் என்று - நல்ல தவம் என்று, நாங்கள் மொழிந்தது யாம்
கூறியதாம், மன்னா மற்றிது வான் உலகு ஆள்விக்கும் - அரசனே! இத்தவமுடைமை
தேவருலகத்தை ஆளும்படி செய்யும், (எ - று.)

     அறுவகைத் துவர்ப்பாவன :- ஆசியம் இரதி அரதி சோகம் பயம் சுகுத்சை என்பன.

(903)