2024. | உத்தமர்க ளேனையிடை யோர்கள்கடை யோரம் முத்தகைய ராவரவர் மூரிநெடு வேலோய் பத்துவகை 1மாதவ மியற்றிய பயத்தால் அத்தகைய செய்கையு மவர்க்கனைய கண்டாய். | (இ - ள்.) மூரி நெடுவேலோய் - வலிய நீண்ட வேற்படையையுடைய மன்னனே !, உத்தமர்கள் ஏனை இடையோர்கள் கடையோராம் - தலையாயவரும் ஒழிந்த இடையாயவரும் கடையாயவரும் என்னும், முத்தகையர் ஆவர் அவர் - மூன்று வகையினர் ஆவர் அப்போகமனிதர், பத்துவகை மாதவம் இயற்றிய பயத்தால் - தலைப்பொறை முதலிய பத்துவகை அறவொழுக்கமுடைய சிறந்த தவத்தைப்புரிந்த பயனாலும், அத்தகைய செய்கை - அவ்வாறாய செயல்களானும் வேற்றுமை யுண்மையின், அனைய அவர்க்கு கண்டாய் - அத்தகைய மூவகைப் பாகுபாடுகள் உளவாயின அவர் தம்முள், (எ - று.) போக மனிதர் தலை யிடைகடை என மூவகைப்படுவர். அப்பகுப்பு அவர் தவப் பெருமை சிறுமைபற்றி வந்தது என்க. | (914) | | |
|
|