போக நிலத்தின் இயல்புணர்த்துவான் ஒரு வரலாறு கூறுதல் | 2025. | அங்கிருவர் 1தம்பதிகள் செய்கையை யறைந்தால் இங்கிருவர் 2செய்கைதமை யெண்ணியறி வாய்நீ தங்குரவ ரோடிருவர் மாறிருவர் தாமாய் இங்கிருவர் தேவர்கள் வளர்ப்ப 3வியல் கின்றார். | (இ - ள்.) அங்கு இருவர் தம்பதிகள் - அவ்விடத்தே நுகர்ச்சியை உடைய இரண்டு காதலர்களின், செய்கையை அறைந்தால் - செயல்களை எடுத்துக் கூறினால், நீ இங்கு இருவர் செய்கை தமை யெண்ணி அறிவாய் - இவ்விடத்தே வாழும் இரு காதலர்களின் வாழ்க்கையோடு வைத்து ஆராய்ந்து அவற்றின் பெருமை சிறுமைகளை நீயே உணர்ந்துகொள்க, இங்கு - இப்போக பூமியில், இருவர் - ஓர் ஆடவனும் ஒருமகளும், தம்குரவர் இருவர் மாறு இருவர் தாமாய் - தம் இருமுது குரவருள் வைத்து, ஆடவன் குரவர் இருவர், மாறாய மகளின் குரவர் இருவரும் ஆகி தேவர்கள் வளர்ப்ப வளர்கின்றார் - அமரர்கள் அன்புடன் வளர்க்க வளரா நின்றார், (எ - று.) போக மனிதன் வாழ்க்கைச் சிறப்பை ஒரு தலைவன் தலைவியர்பால் வைத்துக் கூறின் நீ நன்குணர்வை எனக் கூறித் தொடங்குகின்றவர் அப்போக பூமியிலே ஓர் ஆடவனும் பெண்ணும் தோன்றா நின்றனர் என்றார் என்க. | (915) | | |
|
|