போக நிலத்தின் இயல்புணர்த்துவான்
ஒரு வரலாறு கூறுதல்

2025. அங்கிருவர் 1தம்பதிகள் செய்கையை யறைந்தால்
இங்கிருவர் 2செய்கைதமை யெண்ணியறி வாய்நீ
தங்குரவ ரோடிருவர் மாறிருவர் தாமாய்
இங்கிருவர் தேவர்கள் வளர்ப்ப 3வியல் கின்றார்.
 
     (இ - ள்.) அங்கு இருவர் தம்பதிகள் - அவ்விடத்தே நுகர்ச்சியை உடைய இரண்டு
காதலர்களின், செய்கையை அறைந்தால் - செயல்களை எடுத்துக் கூறினால், நீ இங்கு
இருவர் செய்கை தமை யெண்ணி அறிவாய் - இவ்விடத்தே வாழும் இரு காதலர்களின்
வாழ்க்கையோடு வைத்து ஆராய்ந்து அவற்றின் பெருமை சிறுமைகளை நீயே
உணர்ந்துகொள்க, இங்கு - இப்போக பூமியில், இருவர் - ஓர் ஆடவனும் ஒருமகளும்,
தம்குரவர் இருவர் மாறு இருவர் தாமாய் - தம் இருமுது குரவருள் வைத்து, ஆடவன்
குரவர் இருவர், மாறாய மகளின் குரவர் இருவரும் ஆகி தேவர்கள் வளர்ப்ப வளர்கின்றார்
- அமரர்கள் அன்புடன் வளர்க்க வளரா நின்றார், (எ - று.)

     போக மனிதன் வாழ்க்கைச் சிறப்பை ஒரு தலைவன் தலைவியர்பால் வைத்துக் கூறின்
நீ நன்குணர்வை எனக் கூறித் தொடங்குகின்றவர் அப்போக பூமியிலே ஓர் ஆடவனும்
பெண்ணும் தோன்றா நின்றனர் என்றார் என்க.

(915)