2033. | அன்றுமுதன் 1மூன்றளவு பல்லமுடி காறும் சென்றுபெரு கிக்களி சிறந்துநனி காமம் என்றுமிடை யின்றியிமை யாரினுகர் வார்க்கு நின்றதுபி ராயமது வேநிழலும் வேலோய். | (இ - ள்.) அன்று முதல் மூன்று அளவு பல்லம் முடிகாறும் - அந்நாள் தொடங்கி மூன்று பல்லம் என்னும் கால அளவு முடியுந்துணையும், என்றும் இடையின்றி - இடையில் ஒரு நாளேனும் வீழ்நாள் படாமல், இமையாரின் - தேவர்களைப் போன்று, காமம் - காமவின்பத்தை, சென்று பெருகி களி சிறந்து நனி நுகர்வார்க்கு - உளம் ஒன்றுபட்டுச் சென்று ஒரு நாளைக் கொருநாள் புதிது புதிதாய்ப் பெருகும் மகிழ்ச்சியாற் சிறப்புற்று, மிகுதியும் நுகரா நின்ற அத்தலைமக்களிருவர்க்கும், பிராயம் அதுவே நின்றது - அவ்விளமைப் பருவமே நிலைத்து நிற்பதாயிற்று, நிழலும் வேலோய் - ஒளிர்கின்ற வேலேந்தும் அரசனே, (எ - று.) அப்போக பூமியில் மூன்று பல்லகாலம் இளமைப்பருவமே நிற்றலால் பெரிதும் இன்பம் நுகர்தற்கு ஏதுவாம் என்க. | (923) | | |
|
|