2055. | இமையாத 1செங்கண்ண ரிரவறியார் பகலறியார் அமையாத பிறப்பறிய ரழலறியார் 2பனியறியார் சுமையாகி மணிமாலை சுடர்ந்திலங்கு கெடுமுடியார் அமையாத நல்லுலகி னகைமணிப்பூ ணமரரே. | (இ - ள்.) இமையாத செங்கண்ணர் - இமைத்தலில்லாத சிவந்த கண்களையுடையராய், இரவறியார் - இஃது இராக்காலம் என்றும் அறியமாட்டார், பகல் அறியார் - இது பகற்காலம் என்றும் அறியமாட்டார், அமையாத பிறப்பு அறியார் - நிலையில்லாத பிறவித் துன்பத்தையும் அறியமாட்டார், அழல் அறியார் - வெப்பத்தை உணரமாட்டார், பனியறியார் - பனியாலுண்டாகும் துயரம் உணரமாட்டார், சுமையாகி மணிமாலை சுடர்ந்து இலங்கும் நெடுமுடியார் - பாரமாக மிக்கு மணிமாலைகள் ஒளிவீசித் திகழ்கின்ற நீண்ட முடியணி அணிந்தவர் ஆகிய, அமையாத நல்லுலகில் - பெருந்தவம் செய்துடையார்க்கன்றிப் பொருந்த மாட்டாத நல்ல வானுலகிலே வாழும், நகைமணிப் பூண் அமரர் - விளங்குகின்ற மணியணிகளையுடைய தேவர்கள், (எ - று.) தேவர்கள் இரவு பகலறியார், பிறப்பிறப்பின் துயரறியார், மழை வெயில் பனிகளாலாய இன்னலிலர் என்க. | (945) | | |
|
|