(இ - ள்.) தேன்மூசு - வண்டுகள் மொய்க்கப்பெற்ற, பனிமலர் விரவிய படலை மார் பினான் - குளிர்ந்த பலவகை மலர்களைக் கொண்டுகலந்து தொடுக்கப்பெற்ற தளிர்மாலையை அணிந்த மார்பையுடையவனாகிய சுவலனசடியரசன், முனிவரர் திருந்து அடிவணங்கி - அம்முனிவர்களுடைய அழகிய திருவடிகளைப் போற்றி, கனிவளர்பொழிலிடைக் கடவுள் நல்நகர் - பழங்கள் நிறைந்த சோலையிலுள்ள அருகக் கடவுளினது சிறந்த திருக் கோயிலை, இனிதினின் வலம் முறைஎய்தி - மகிழ்ச்சியோடு முறைமையாக வலஞ்செய்து, ஏகினான் - அவ்விடத்தைவிட்டுச் செல்லலானான் (எ - று.) அருகக்கடவுளை வணங்கியபின், எதிர்பாராது வந்து தோன்றிய சமண முனிவர்களிடம் அருளுரையும் பெற்றுக்கொண்ட அரசன், முனிவர்களை வணங்கி அவர்களுடைய உடன்பாடு பெற்றுக்கொண்டு திருக்கோயிலையும் வலஞ்செய்து அவ்விடத்தை விட்டு அப்பாற் செல்லுகின்றான். |