2081. | பொருளிலார்க் கிவ்வழிப் பொறியின் போகமும் அருளிலார்க் கறத்தினாம் பயனு நூல்வழி உருள்விலா மனத்தவர்க் குணர்வும் போன்மனம் 4தெருளிலார்க் கிசைவில டிருவின் செல்வியே. | (இ - ள்.) பொருள் இலார்க்கு - பொருள் இல்லாத நல்குரவாளர்க்கு, இவ்வழி - இவ்வுலகத்தே, பொறியின் போகமும் - கண் முதலிய பொறிகளால் நுகரப்படும் காட்சி முதலிய இன்பமும், அருள் இலார்க்கு - அருட்செல்வம் இல்லாத மாக்கட்கு, அறத்தின் ஆம் பயனும் - அறச் செயலாலே உண்டாகும் பயனும், நூல்வழி - மெய்ந்நூல்களின் வழி, உருள்விலா மனத்தவர்க்கு - பயிலுதலில்லாத மனத்தையுடைய எளியவர்க்கு, உணர்வும் - அறிவும், இசைவில போல் - சேர்தல் இல்லையானாற் போன்று தெருள் இலார்க்கு - அறிவு இலாதவர்க்கு, திருவின் செல்வி - திருமகள், இசைவிலள் - பொருந்துதல் இல்லை, (எ - று.) “அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு“ “தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி னருளாதான் செய்யு மறம்“ என்னும் மெய்ம்மொழிகளை இதன் கருத்துடன் நோக்குக. திருவின் செல்வி - செல்வம். மாந்தர்க்கு “கற்றனைத் தூறும் அறிவி“ என்பவாகலின் கல்லாதார் அறிவிலர் என்றார். பெருஞ் செல்வம் உற்றவிடத்தும் அதனை நெறியறிந்து துய்த்தற்கும் அறிவு வேண்டும். அறிவு இல்லாதவர் “ என்னுடைய ரேனும் இலரா“ தல் பற்றித் “தெருளிலார்க்கத் திருவின் செல்வி இசைவிலள்“ என்றார். | (13) | | |
|
|