2102. | காதல 1ராயினுங் காதல் கையிகந் தேதில 2ராயின மடிகட் கின்றென ஊதுலை மெழுகினின் றுருகி னாரவர் போதலர் கண்களும் புனல்ப டைத்தவே. | (இ - ள்.) காதலர் ஆயினும் - எளியேங்கள் காதல் கொள்ளற்குரிய மக்களாய் இருந்தேயும், காதல் கையிகந்து - அக்காதல் ஒழிக்கப்பட்டு, இன்று - இற்றைக்கு, அடிகட்கு - எம் தந்தைக்கு, ஏதிலராயினம் - அயலாராய் ஆகிவிட்டோம், என - என்று கூறி, ஊது உலை மெழுகின் - ஊதப்பட்ட கொல்லுலைத் தீயின் இட்ட மெழுகைப் போன்று, நின்று உருகினார் - நின்ற நிலையில் நின்றே உளம் உருகுவாராயினர், அவர் - அவர்களுடைய, போது அலர் கண்களும் - செந்தாமரை மலர்ந்தாலொத்த கண்களும், புனல் படைத்த - துயர் மிகுதியால் நீரைப் பெருக்கின, (எ - று.) தனது துறவுக்கோலத்தைக் கண்டு அலறி அழுகின்ற தம்பால் பரிவு காட்டாத பயாபதி எமக்கு இன்று தொடர்பில்லாத அயலார்களைப் போலவே ஆயினர் என்று கூறி விசயதிவிட்டர்கள் வருந்தினர் என்பதாம். | ( 34 ) | | |
|
|