விசயதிவிட்டர்கள் நகரடைதல்

2107. திருவுடை யடிகடஞ் சிந்தைக் கேதமாம்
பரிவொடு பன்னிநாம் பயிற்றி லென்றுதம்
எரிவிடு சுடர்முடி யிலங்கத் தாழ்ந்துபோய்
மருவுடை வளநகர் மன்னர் துன்னினார்.
 
     (இ - ள்.) திருவுடை அடிகள் தம் சிந்தைக்கு ஏதமாம் - வீட்டின்பமாகிய
செல்வமுடைய அடிகளாரின் திருவுளத்திற்குக் குற்றமாய்த் தோன்றும், நாம் பரிவொடு
பன்னிப் பயிற்றில் - யாம் எமக்குற்ற வருத்தத்தோடே பலபடப் பாரித்துப் பேசில், என்று -
என்று கருதி, தம் எரிவிடு சுடர் முடி இலங்கத் தாழ்ந்து -தம் ஒளி விட்டுச் சுடர்கின்ற முடி
திகழும்படி வணங்கி, போய் மருவுடை வளநகர் மன்னர் துன்னினார் - சென்று மணமிக்க
தம் வளநகரத்தை அவ்வரசர்கள் அடைந்தனர், (எ - று.)
     
     செல்வம் எல்லாவற்றுள்ளும் சிறந்த மெய்யுணர்ச்சியாகிய செல்வம் உடையவன்
ஆதலின் பயாபதி மன்னனைத் திருவுடை அடிகள் என்று விசயதிவிட்டர்கள்
போற்றினர் என்க.

(39)