2113. | பின்னணி யோகு நான்மை யபரகாத் 1திரம்பேற் றேனைத் தன்னவ யவங்கண் முற்றித் தயங்குநூன் மனங்க ளோவா துன்னிய திசையி னுய்க்கு முணர்வெனும் வயிரத் தோட்டி இன்னியன் ஞான வேழத் தெழிலெருத் தேறி னானே. | (இ - ள்.) பின் அணி - நால்வகைத் தியானங்களின் ஈற்றினின்ற அழகிய, யோகு நான்மை அபரகாத்திரம் பெற்று - (பிருதக்துவ விதர்க்கவிசாரம், ஏகத்துவ விதர்க்க விசாரம், சூக்குமக் கிரியாபிரவிருத்தி, வியூபரதகிரியா நிவிருத்தி எனும்) சுக்லத் தியானத்தின் கூறுபாடுகளின் கூட்டமாகிய நான்கு கால்களையுடையதாய், ஏனைத் தன் அவயவங்கள்முற்றி - எஞ்சிய தன் உறுப்புக்களும் இலக்கணமுடையவாய் அமைந்த, இன் இயல் ஞானவேழத்து - இனிய இயல்பமைந்த அறிவாகிய களிற்றினது, எழில் எருத்து - அழகிய பிடரின்கண், தயங்கு நூல் - திகழ்கின்ற மெய்ந்நூல்களால் உருப்பெற்றதும், மனங்கள் - பொறிகளை, ஓவாது - ஒழியாமல், உன்னிய திசையின் உய்க்கும் - நினைத்த நெறியிலே செலுத்துவதும் ஆகிய, உணர்வெனும் வயிரத் தோட்டி - மெய்யுணர்ச்சி என்னும் திண்ணிய அங்குசத்தோடே, ஏறினான் ஏ - ஏறி யமர்ந்தான், (எ - று.) யோகு - கூட்டம், அபரகாத்திரம் - கால்கள். மனங்கள் - ஈண்டுப் பொறிகட்கு ஆகுபெயர். சுக்கிலத்தியானத்தின் நான்கு கூறுகளையும் கால்களாய்க்கொண்டு நடக்கும் மெய்யறிவாகிய யானையில் ஏறினான் என்க. யோகு - பரமாகமத்தின் பிரிவுகளாகிய பிரதமாநுயோகம் முதலிய நான்கும் எனினுமாம். தயங்கு நூல்களால் உறுதிபெற்ற உணர்வெனும் வயிரத் தோட்டி என்று இயைக்க. | ( 45 ) | | |
|
|