2116. | விண்கடாஞ் செய்யும் வெய்ய வினைவர்கட் கரண மாகிக் கண்கடா மறைக்கு மோரேழ் கடிவினை பொடிசெய் திட்டே 1எண்கடா நவின்ற வீரெண் கொடிமதிற் கோட்டை கட்டி எண்கடா முடைய வெண்மர் குறும்பரை யெறிந்து வீழ்ந்தார் | (இ - ள்.) விண்கள் தாம் செய்யும் வெய்ய - வீண்செயல்களையே செய்யாநின்ற கொடிய, வினைவர்கட்கு - இருவினைப் பகைவர்கட்கு, அரணமாகி - காவலாகப் பொருந்தி, கண்கடாம் மறைக்கும் - ஞானக்கண்களை மறையாநின்ற, ஓர் ஏழ் கடிவினை பொடி செய்திட்டு - ஓர் ஏழாகிய கொடிய தரிசனமோகநீயம் என்னும் வினைகளைச் சுட்டுத் துகள் செய்து, எண்கள் தாம் நவின்ற - எண்ணிக் கூறப்பட்ட, ஈர் எண்கொடிமதில் கோட்டை கட்டி - சோடச கர்மமென்கிற கொடியையும் மதிலையும் உடைய வலிய கோட்டையைக் கட்டிக்கொண்டு, எண்கள்தாம் உடைய எண்மர் குறும்பரை யெறிந்து வீழ்த்தார் - ஆராய்தற்கு உரிய பிரத்யாப்பிரத்தி யாக்யானம் என்னும் எட்டுக் கயவர்களையும் கொன்று தள்ளினான், (எ - று.) எண்கடாம் உடைய எண்மர் குறும்பர் என்றது, வெகுளி முதலிய வற்றை. விளக்கம் அடுத்த செய்யுள் விரிவுரையிற் காண்க. | ( 48 ) | | |
|
|