2117. | ஈடிலர் வெகுளி யுள்ளிட் 1டெண்மரை 2யெறியத் தீயுட் பேடுவந் தொன்று பாய்ந்து முடிந்தது முடிந்த பின்னை ஓடிவந் தொருத்தி வீழ்ந்தா ளுழையவ ரறுவர் பட்டார் ஆடவன் றானும் போழ்து கழித்துவந் தொருவ னாழ்ந்தான். | (இ - ள்.) ஈடு இலர் வெகுளி உள்ளிட்டு எண்மரை - தமக்கு ஒப்பில்லாதவராகிய அச்சினம் முதலிய எண்மரைக் கொன்றவுடனே, பேடு ஒன்று மாய்ந்து வந்து முடிந்தது - ஒரு பேடி தன்மேல் விரைந்து வந்து போராற்றி இறந்தொழிந்தது, முடிந்த பின்னை - அப்பேடி மாய்ந்தவுடன், ஓடிவந்து - விரைந்து தன்மேற் போர் ஆற்ற வந்து, ஒருத்தி - ஒருமகள், வீழ்ந்தாள் - இறந்துபட்டாள், உழையவர் - அவளுக்கு அணுக்கராகிய, அறுவர் பட்டார் - ஆறு வீரர்கள் பின்னர்ப் போர் ஆற்றி மாண்டனர், ஆடவன்றானும் ஒருவன் - ஒரு மறவனும், போழ்து கழித்து - சிறிதுகாலம் தாழ்த்து வந்து போர்செய்து, ஆழ்ந்தான்-ஒழிந்தான், தான் : அசை, (எ - று.) ஈடிலர் வெகுளி யுள்ளிட்டு எண்மர் என்றது:- அப்ரத்கியாக்யான குரோதமான மாயா, லோபம் நான்கும், பிரத்தியாக்யான, குரோதமான மாயா, லோப நான்குமாகிய எட்டுமாம். பேடு - நபும்சகவேதம். ஒருத்தி - ஸ்திரீவேதம். ஆடவன் - புருடவேதம். அறுவர், ஆஸ்யைரதி, அரதி சோகம் பயம் சுகுப்ஸை என்பன. இவ்வொன்பதும் நொகஷாயம் என்று கூறப்படும். | ( 49 ) | | |
|
|