பயாபதி கேவலமடந்தையை மணத்தல்

2120. நெடிதுட னாய தெவ்வர் நால்வரை நீறு செய்திட்
டடிகள்பின் முடிவென் 1பாளை யகப்படுத் தனைய ராக
இடிமுர சதிருந் தானை யரசரோ டிங்க ணீண்டிக்
கடிகம ழமரர் வீரன் கடிவினை முடிவித் தாரே.
 
     (இ - ள்.) நெடிது உடன் ஆய தெவ்வர் - நீண்டகாலமாகத் தன்னுடனே
பகைத்துறைந்த பகைவர்களாகிய, நால்வரை நீறு செய்திட்டு - ஞானாவரணீயம் முதலிய
காதிகர்மங்களாகிய நான்கு வீரர்களையும் சுட்டெரித்துத் துகளாக்கி, பின் - அதன் பின்னர்,
அடிகள் - பயாபதி அடிகளார், முடிவு என்பாளை - முடிபொருள் என்பவளாகிய கேவல
ஞானத்தை, அகப்படுத்து - தன் வயப்படுத்திக்கொண்டு, அனையராக - அவ்வுயரிய
நிலையினை உடையராகிவிட, அரசரோடும் - ஏனைய தவவேந்தர்களோடும், இடிமுரசதிரும்
தானையோடு - இடி போன்று முரசங்கள் முழங்காநிற்கும் தம் படைகளோடும், இங்கண்
ஈண்டி - இப்பயாபதி அடிகளார்பால் வந்து நெருங்கி, கடிகமழ் அமரர் - மணம்மிக்க
தேவர்கள், வீரன் கடிவினை முடிவித்தார் - வீரனாகிய பயாபதி வேந்தற்குக்
கேவலமடந்தையோடு உளதாகிய திருமண வினையை நிகழ்த்தினார், (எ - று.)
“நெடி துடனாய தெவ்வர் நால்வர்“ என்றது முதற் செய்யுளிற் கூறிய “யீரிருவர்“ என்றதை
அநுவதித்தபடியாம்.
கடிவினை என்றது மகாநிர்வாணத்தை.
 

( 52 )