2125. | அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி உலக மலோக முடனே விழுங்கிப் புலவன் முடிவென்னும் பூங்கொடியுந் தானும் நிலவு சிவகதியு ணீங்காது நின்றான். | (இ - ள்.) அலகில் பெருங்குணத்தோன் - அளவிறந்த பெரிய குணம் உடைய பயாபதி, ஆவரணம் நீக்கி -மதிஞானா வரணீயம் முதலிய மறைப்புகளை ஒருங்கே அகற்றி, உலோகம் அலோகம் உடனே விழுங்கி - உலோகமும் அலோகமும் ஆகிய ஐந்து அத்திகாயங்களையும் தனது மெய்யுணர்வானே விழுங்கி, புலவன் - நன்ஞானம் உடைய பயாபதி, முடிவென்னும் - கேவலஞானம் என்னும், பூங்கொடியும் தானும், - பூங்கொம்பு போல்வளாகிய திருமகளும் தானும் நிலவு சிவ கதியுள் - நிலைத்தலையுடைய வீட்டினுள், நீங்காது நின்றான் - பிரிவின்றி ஒன்றி நிற்பானாயினன், (எ - று.) சீவாத்திகாயம், புத்தகலாத்திகாயம், தன்மாத்திகாயம், அதன்மாத்திகாயம், ஆகாயாத்திகாயம் இவ்வைந்தும் மூலப்பொருளாம். காலத்தோடு கூட்ட, மூலப்பொருள் ஆறாம், இவற்றின் கூட்டமே உலோகமாம், ஆகாயத்திகாயம் மட்டும் அலோகம் என்று சொல்லப்படும். | ( 57 ) | | |
|
|