தேவர்கள் தம்மிடத்திற் கேகல்

2126. இனையன பலபரவி யிறைஞ்சி யேத்தி யிமையவர்கள்
கனையெரி மிகுவேள்வி கலந்து செய்து களிப்பெய்தி
அனையவ 1ரறவாழி யமிர்த நீங்கா தகத்தாடிப்
புனையவிர் சுடரொளியார்ப் புகழ்ந்து தத்த மிடம்புக்கார்.
 
     (இ - ள்.) இனையன பலபரவி இறைஞ்சி ஏத்தி - இவ்வாறாய வாழ்த்துரைகள் பற்பல
கூறி வணங்கிப் புகழ்ந்து, இமையவர்கள் - அமரர்கள், கனை யெரி மிகுவேள்வி - ஒலிபட
எரிகின்ற தீ மிக்க வேள்விகளையும், கலந்து செய்து - கூடி இயற்றி, களிப்பு எய்தி -
மகிழ்ச்சி அடைந்து, அனையவர் - அத்தலைவன் தலைவியர்களின், அறவாழி அமிர்தம் - அறவுரைக் கடலின்கண் விளைந்த கேள்வி அமிழ்தமும், அகத்து நீங்காது ஆடி - தம்
முள்ளத்தே ஒழிவிலாதவாறு அயின்றாடி, புனையவிர் சுடர் ஒளியார் - ஒப்பனையாலே
விரிகின்ற சுடராகிய ஒளியையுடைய அத்தலைவன் தலைவியரை, புகழ்ந்து - பரவிப்
புகழ்ந்து, தத்தம் இடம் புக்கார் - தத்தமக்குரிய தேவர் நாட்டிலே செல்வாராயினர்,
(எ - று.)
    தேவர்கள் பயாபதி மன்னனைப் புகழ்ந்து போற்றித் தத்தம் இடத்திற்கு ஏகினர் என்க
( 58 )