சுயம்பிரபை கடவுளைப் போற்றத் தொடங்குதல்

213. தண்ணவிர் நிலாச்சுடர் தவழு மவ்வரைக்
கண்ணவிர் சென்னிமேற் கடவுட் 1டானமஃ
தண்ணலங் கோமக ளருச்சித் தாயிடை
2விண்ணவ ருலகமும் வியப்ப வேத்தினாள்.
 

     (இ - ள்.) அண்ணல் அம்கோமகள் - பெருமையிற்சிறந்த அழகிய
சுவலனசடியரசனுடைய மகள் ஆகிய சுயம்பிரபை, தண் அவிர் - குளிர்ச்சியாய்
விளங்குகின்ற, நிலாச்சுடர் தவழும் - திங்களொளி வீசப்பெறும், அவ்வரைக்கண் - அந்த
வெள்ளிமலையினிடத்திலே, அவிர் - விளங்குகின்ற, சென்னிமேல் - முடியின் மீதுள்ள,
கடவுள் தானம் அஃது - கடவுளின் வடிவத்தை; அருச்சித்து - வழிபாடுசெய்து, ஆயிடை -
அவ்விடத்தில், விண்ணவர் உலகமும் வியப்ப ஏத்தினாள் - தேவஉலகத்தினரும் வியந்து
புகழுமாறு போற்றலானாள். (எ - று.)

கடவுள் தானம் அஃது அருச்சித்து - ஸ்ரீ கோயிலில் எழுந்தருளிய அருகக்கடவுட்கு
அருச்சனை செய்து; கடவுள் கோயில் கொண்டுள்ள இடம் கடவுள்தானம்.
விண்ணவருலகமும்; உம் உயர்வு சிறப்பு.  

( 95 )