இதுவுமது

216. ஆரருள் பயந்தனை யாழ்துய ரவித்தனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
சீரருண் மொழியநின் றிருவடி தொழுதனம்.
 

    (இ - ள்.) ஆர் அருள் பயந்தனை - எல்லாவுயிர்கட்கு மிக்க தண்ணளியைச்
செய்தாய், ஆழ்துயர் அவித்தனை - அடியார்களது மிகுந்த துன்பங்களைத் தீர்த்தருளினாய்,
ஓர் அருள் ஆழியை - ஒப்பற்ற அருளாகிய உருளையையுடையாய், உலகுடை ஒருவனை -
உலக முழுவதையும் தனதாகவுடைய ஒப்பற்ற, ஓர்அருள் ஆழியை - தலைவனே! சீர்அருள்
மொழிய - சிறந்த தண்ணளியுடன் சொல்லுஞ் சொற்களையுடையவனே; நின் திருவடி
தொழுதனம் - உன் அழகிய அடிகளை வணங்கினோம் (எ - று.)

ஆர் அருள் - நிறைந்த அருள்; வினைத்தொகை. “அறவாழி யந்தணன்“ என்பது
அருகக்கடவுளுக்கு ஒரு பெயராதலால் “ஓரருளாழியை“ என்றார்.

( 98 )