(இ - ள்.) சுடரும் வேலினான் மன்னவன் - ஒளிவிடுகின்ற வேற் படையை யுடையவனாகிய சுவலனசடியரசன், அல்லியின் அரவவண்டு இரிய - அணிந்துள்ள மலர்களின் உள்ளிதழ்களிற் பொருந்தியுள்ள வண்டுகள் அகலும்படி, ஆய்மலர் வல்லியின் வணங்கிய - சிறந்த பூங்கொடியைப்போலப் பணிந்த, மகளை - தன் மகளான சுயம்பிரபையை, முல்லைஅம் சிகழிகை முச்சி மோந்து - முல்லைப்பூ மாலையை அணிந்த அழகிய மயிர்முடியையுடைய உச்சியை மோந்து, இவை சொல்லிய தொடங்கினான் - இந்த மொழிகளைச் சொல்லலானான் (எ - று.) அல்லி - அகவிதழ். “அல்லி அகவிதழ்; புல்லி புறவிதழ்“ என்பன சூத்திரங்கள். அல்லி - பூந்தாது எனினுமாம். சொல்லுபவைகளை அடுத்துவருஞ் செய்யுள்களில் காண்க. |