காமமுங் காதலும்

232.

காதலா 1லறிவது காமங் காதலே
யேதிலா ருணர்வினா 2லெண்ண லாவதன்
றாதலான் மாதரா டிறத்தி னாணைநூ
லோதினா ருரைவழி யொட்டற் பாலதே.
 

     (இ - ள்.) காமம் - சிற்றின்ப நோக்கமானது, காதலால் அறிவது - காதலைக்கொண்டு
ஒருவாறு உணரப்பெறும், காதல் - சிற்றின்பவுணர்வு, ஏதிலார் உணர்வினால் எண்ணல்
ஆவது அன்று - மற்றையோருடைய உணர்ச்சியினால் அளந்தறியக்கூடியது அன்று,
ஆதலான் - ஆகையினாலே, மாதராள் திறத்தில் - சுயம்பிரபையின் செயலில், ஆணைநூல்
- அறநூலை, ஓதினார் உரைவழி - படித்தறிந்தவர்களது சொல்லின் வழியே, ஒட்டற்பாலது
- பொருந்த நடக்குதல் வேண்டும். (எ - று.)

காதலைக்கொண்டு காமத்தை அளவுபடுத்துதல் வேண்டும்; காத னுண்மையையும்
இன்மையையும் மற்றையோர் அறியார். சுயம்பிரபை திறத்தில் நாமாகச் செய்யக்கூடியது
ஒன்றுமில்லை. அமைச்சர்களைக் கூட்டிக் கலந்தெண்ணியே ஒரு முடிவுக்கு வருதல்
வேண்டும் என்று அரசன் ஒரு முடிவிற்கு வருகிறான். ஏதிலார் - அயலார்; ஏதும்
தொடர்பில்லாதவர் என்க.

( 114 )